3 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு பறிப்பு: சமக தலைவர் சரத்குமார் நடவடிக்கை.. !

3 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு பறிப்பு: சமக தலைவர் சரத்குமார் நடவடிக்கை.. !
By: TeamParivu Posted On: June 12, 2022 View: 76

சமக தலைவர் சரத்குமார் வௌியிட்டுள்ள அறிக்கை: 

வட சென்னை மேற்கு மாவட்டம்  எட்ராஜா, வேலூர் வடக்கு மாவட்டம் பழனிo, கடலூர் மத்தியம் ஆனந்தராஜ்  ஆகிய மூவரும் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவராக செயல்படுவார்கள். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தையூர் ரமேஷ் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

தர்மபுரி மேற்கு மாவட்டம் நரசிம்மமூர்த்தி, கடலூர் மேற்கு மாவட்டம் ராஜசேகர், மதுரை மேற்கு மாவட்டம் சுரேஷ் ஆகியோர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மேலும், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளராக நாதன் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:
#சமக தலைவர் சரத்குமார்  # செயலாளர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..