கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாடநூல்கள், சீருடைகளை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்ற கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான சீருடைகள், பாடநூல்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை 2 வாரங்களில் பிறப்பிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர் உரிமை என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டுக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவனிடம் சீருடை, பாடநூல் ஆகியவற்றிக்கு சுமார் ரூ. 12,000 கட்டணம் செலுத்தும் படி பள்ளி நிருவாகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது, அப்பொழுது எந்த கட்டணம் இல்லாமல் அந்த மாணவர் படிப்பை தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதன் பிறகு வகுப்பில் சேர்ந்த போதும் தனக்கு அந்த பாடப்புத்தகங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என கூறி மாநில குழந்தை உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளர். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவே இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள் கல்வி கட்டணம் மட்டுமில்லாமல் அந்த கல்வி கற்றுக்கொள்வதற்கு தேவையான பொருட்கள் கட்டணத்தையும் மாநில அரசு உரிமை எடுக்கவேண்.
Tags:
#கல்விஉரிமைச்சட்டம்
# சீருடைகள்
# பாடநூல்கள்
# உயர்நீதிமன்றம்