சென்னை : காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி, மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக காவிரியில் திறந்துவிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.