சென்னை: சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக கோவை மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையாகிறது.
அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கான தக்காளி இறக்குமதி குறைந்ததால் கடுமையாக விலையுயர்ந்துள்ளதாக சிறு, மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளியின் விலை உயர்வு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வழக்கமாக ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தக்காளியின் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த ஆண்டு தக்காளியின் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கும், மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் தோட்டக்கலைத்துறை மூலம் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 6 உழவர் சந்தைகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
# கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையாகிறது.