சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனிடையே வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13, 14 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி, கோவை. சென்னை உற்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.