பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், மழையால் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டிருந்ததால், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், மழையால் அறுவடை பாதிப்பு மார்க்கெட்டுக்கு வாழைத்தார்டில் வாரம் தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து சற்று அதிகமாக இருந்துள்ளது.
ஆனால், கடந்த வாரத்தில் சுற்றுவட்டார பகுதியில் பெய்த பருவமழையால், இதில் நேற்று நடந்த சந்தை நாளில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்துள்ளது. வாழைத்தார்களின் வரத்து குறைவால், வியாபாரிகள் கூடுதல் விலைக்கு வாங்கி சென்றனர்.இதில், செவ்வாழைத்தார் (1 கிலோ) ரூ.45 முதல் ரூ.52 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.38க்கும், பூவந்தார் ரூ.38க்கும், ரஸ்தாளி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.35க்கும், கேரள ரஸ்தாளி மற்றும் நேந்திரன் 1 கிலோ ரூ.40க்கும், என கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:
#மழையால் அறுவடை பாதிப்பு மார்க்கெட்டுக்கு வாழைத்தார்