சென்னை: மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 24ல் தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.