சென்னை: இந்த ஆட்சியில்தான் பழைய பென்ஷன் கிடைக்கும். வேறு ஆட்சியில் கிடைக்க வாய்ப்பில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இருந்து ஆசிரியர் சங்கம் வெளியேறவில்லை. அந்த அமைப்பு எப்போதும்போல நீடிக்கிறது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையின் பேரில் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கூட்டமைப்புடன் டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பிறகு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தில் இடம்பெற்றுள்ள 22 சங்கங்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த மாதம் அனைத்து சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கடந்த வாரம் தொடக்க கல்வி ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில்தான் இந்த ஆசிரியர் முன்னேற்ற சங்கத்துடன் பேச்சுவார்ததை நடந்தது. ஆசிரியர் சங்கங்கள் எப்போதும் ஒன்று போலத்தான் உள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டணியில் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. தனிப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசத்தான் இந்த கூட்டமைப்பு. சிலர் கூட்மைப்பு பிளவு பட்டதாககூறுவது தவறு. இன்றைய பேச்சுவார்த்தையில் எங்கள் தரப்பில் 13 கோரிக்கைகள் வைக்கப்பட்டன