அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரிய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என அறிவித்த உச்சநீதிமன்றம் ஜூலை 31 வரை மட்டுமே பதவி நீட்டிக்க அனுமதி அளித்திருந்தது. 4 நாட்களே இருக்கும் சூழலில் அக்.15-ம் தேதி வரை எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க அனுமதி தர ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்க முடியும்.
Tags:
# இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா