குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை விரைவில் வழங்க ஏற்பாடு: பழனிவேல் தியாகராஜன் தகவல்..!

குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை விரைவில் வழங்க ஏற்பாடு:  பழனிவேல் தியாகராஜன் தகவல்..!
By: TeamParivu Posted On: June 15, 2022 View: 104

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த அவர் மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் போன்று தகுதியுடைய நபர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கு விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும். இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவன்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்த அவர், இதற்காக 25 நிறுவங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இளைஞர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் விதமாக அரசின் கொள்முதல் திட்டம் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Tags:
#குடும்ப தலைவிகள்  # உரிமைத்தொகை  # தமிழக அரசு  # ஊக்கத்தொகை  # நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..