சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
By: TeamParivu Posted On: August 03, 2023 View: 58

சென்னை: சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்லும் வகையில் மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களின் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை மற்றும் மான்டஸ் புயலின் போது மழைநீர் சாலைகளில் தேங்காமல் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் வாயிலாக நீர்நிலை ஆறுகள் மற்றும் கால்வாயில் அனுப்பப்படுகிறது. பொதுமக்கள் எந்த வித இடர்பாடும் இன்றியும், போக்குவரத்து இடையூறு இன்றியும் சென்றிட இது வழிவகை செய்யப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். பழவந்தாங்கல், நங்கநல்லூர், போரூர், அசோக் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Tags:
#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..