ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக விசாரணை

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக விசாரணை
By: TeamParivu Posted On: August 03, 2023 View: 44

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி தாரூபா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ்குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இதில் இந்தியா 17 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Tags:
#முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..