கண்ணகி நகரில் கற்களை வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த போதை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை பாரிமுனை இருந்து கண்ணகி நகருக்கு நேற்று இரவு மாநகர பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுனர் கண்ணபிரான் ஓட்டினார். பின்னர், கண்ணகி நகருக்கு பேருந்து வந்தது. இதனையடுத்து, ஓட்டுநர் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த கும்பல் திடீரென மாநகர பேருந்து மீது கற்களை வீசியது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து, ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு கல் வீசிய நபரை பிடிக்க துரத்தினார்.அப்போது, அந்த கும்பல் ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பியது.இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
#கண்ணகி நகர்
# மாநகர பேருந்து
# போதை கும்பல்