சென்னை: அறியப்படாத சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். அறியப்படாத சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகள் மக்களின் தனிப்பட்ட தரவு, வங்கிக் கணக்குக்கு ஆபத்தானதாக முடியலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக சைபர் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.