பெங்களூரு : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்த 2 சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில் ஆர்சிபி அணியில் இணைகிறார். அவருடன் டிவில்லியர்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளது.