ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் "ஊராட்சி மணி" அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் "ஊராட்சி மணி" அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வூராட்சி மணி அழைப்பு மையம் வரும் 26ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளது. இந்த "ஊராட்சி மணி" அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் "155340" வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.
Tags:
##DMK#MK STALIN#