மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமஸே்வரத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பித்ருக்களுக்கு திதி கொடுக்க ஒருவர் கட்டாயம் தங்கள் வாழ்நாளில் ராமஸே்வரத்திலும் காசியிலும் கொடுத்து மூதாதையர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பார்கள். அதாவது வடஇந்தியர்கள் காசியில் திதி கொடுத்துவிட்டு ராமேஸ்வரத்திற்கு வருவர்.
தென்னிந்தியர்கள் ராமேஸ்வரத்திற்கு முதலிலும் பிறகு காசியிலும் கொடுக்க வேண்டும் என்பார்கள். இவை எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் செல்ல வேண்டும் என்றில்லை, தங்களால் எப்போது இயலுமோ அப்போது செல்லலாம்.
அந்த வகையில் புண்ணிய ஷேத்திரமான ராமேஸ்வரத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசைகளின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் மகாளய அமாவாசையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும். மகாளய பட்சம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இது 10 நாட்களுக்கு இருக்கும். இந்த 10 நாட்களும் இறந்த முன்னோர்களை அவரவர் வீடுகளுக்கு சென்று வர எமதர்மர் அனுப்புவார் என்பது ஐதீகம். எனவே இந்த 10 நாட்களிலும் காகத்திற்கு உணவு அளிக்க வேண்டும். வீடு வாசலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அவர்கள் இறந்த திதி வந்தால் அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முன்னோர்களிந் மனம் குளிர்ந்தால் நம் குடும்பம் செழிப்பாக வளரும். செல்வமும் பெருகும். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி மஹாளய அமாவாசை ஆகும். அங்கு பித்ருக்களுக்கு நீர் நிலைகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காக பலர் காவிரி படித்துறைகளுக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கும் செல்வார்கள். அது போல் ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு நீராடி பிண்டத்தை அக்னி தீர்த்தக் கடலில் கரைப்பார்கள். அதன் பிறகு 22 குளங்களிலும் நீராடுவார்கள்.
பித்ருக்களுக்கு திதி கொடுக்க ஒருவர் கட்டாயம் தங்கள் வாழ்நாளில் ராமஸே்வரத்திலும் காசியிலும் கொடுத்து மூதாதையர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பார்கள். அதாவது வடஇந்தியர்கள் காசியில் திதி கொடுத்துவிட்டு ராமேஸ்வரத்திற்கு வருவர்.
தென்னிந்தியர்கள் ராமேஸ்வரத்திற்கு முதலிலும் பிறகு காசியிலும் கொடுக்க வேண்டும் என்பார்கள். இவை எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் செல்ல வேண்டும் என்றில்லை, தங்களால் எப்போது இயலுமோ அப்போது செல்லலாம்.
அந்த வகையில் புண்ணிய ஷேத்திரமான ராமேஸ்வரத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசைகளின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் மகாளய அமாவாசையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும். மகாளய பட்சம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இது 10 நாட்களுக்கு இருக்கும். இந்த 10 நாட்களும் இறந்த முன்னோர்களை அவரவர் வீடுகளுக்கு சென்று வர எமதர்மர் அனுப்புவார் என்பது ஐதீகம். எனவே இந்த 10 நாட்களிலும் காகத்திற்கு உணவு அளிக்க வேண்டும். வீடு வாசலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அவர்கள் இறந்த திதி வந்தால் அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முன்னோர்களிந் மனம் குளிர்ந்தால் நம் குடும்பம் செழிப்பாக வளரும். செல்வமும் பெருகும். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி மஹாளய அமாவாசை ஆகும். அங்கு பித்ருக்களுக்கு நீர் நிலைகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காக பலர் காவிரி படித்துறைகளுக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கும் செல்வார்கள். அது போல் ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு நீராடி பிண்டத்தை அக்னி தீர்த்தக் கடலில் கரைப்பார்கள். அதன் பிறகு 22 குளங்களிலும் நீராடுவார்கள்.
இந்த நன்னாளில் ராமேஸ்வரத்திற்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவர். இதற்காக 13ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அது போல் 14 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர், சென்னை, சேலம், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.