நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 114

இந்தியாவை சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான தலைசிறந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அமர்த்தியா சென் இன்று காலமானார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். 1998- ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் வென்றார். 1933 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த அமர்த்தியா சென் பொருளாதாரத்தில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கினார். இந்தியாவின் பொருளாதார நிபுணர்களில் மிகவும் மூத்தவராகவும் மதிக்கப்படுபவராகவும் விளங்கிய அமர்த்தியா சென், 89-வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் அமர்த்தியா சென் அங்கிருந்தபடியே பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக்கழகத்திலும் பல பொறுப்புகளில் இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த பொறுப்புகளை துறந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அமர்த்தியா சென் இன்று காலமானார்.


Tags:
## 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..