4 வழி மாநில சாலைகளில் இனி நோ டோல்கேட் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு பொதுமக்கள் நிம்மதி

4 வழி மாநில சாலைகளில் இனி நோ டோல்கேட் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு  பொதுமக்கள் நிம்மதி
By: TeamParivu Posted On: October 11, 2023 View: 81

மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டாலும் அதில் டோல்கேட் அமைக்கப்படாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

7 மீட்டர் கொண்ட மாநில சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். மாநிலம் முழுக்க பல இடங்களில் இப்படி சாலைகளை மாற்றுகின்றனர்.

இப்படி மாற்றப்படும் சாலைகளில் டோல் கேட்டுகள் கூடாது, என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். மீறி வைக்கப்படும் டோல் கேட்டுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கியமாக மாநிலம் முழுக்க மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் டோல் கேட்டுகள் அமைக்கப்படவில்லை. இங்கே மீறி அமைக்கப்படும் டோல் கேட்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


Tags:
##chennai# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..