12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய தகவல்... பொதுத்தேர்வு எழுத ரெடியா? எமிஸ் அப்டேட்... ரூல்ஸ் இதுதான்!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய தகவல்... பொதுத்தேர்வு எழுத ரெடியா? எமிஸ் அப்டேட்... ரூல்ஸ் இதுதான்!
By: TeamParivu Posted On: November 02, 2023 View: 64

நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தேர்வுகள் துறை சார்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்:

  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் விஷயத்தில் முக்கிய நடவடிக்கை
  • நீண்ட நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் அனுமதிக்க வேண்டாம் என ஆலோசனை
  • 11ஆம் வகுப்பு வருகை பதிவேட்டையும் ஆராய்ந்து உரிய தீர்வு காண திட்டம்
  • தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உயர்கல்விக்கான நுழைவு வாயில் என்று கூட சொல்லலாம். எந்த துறையை தேர்ந்தெடுத்து படிப்பது, விரும்பிய துறையில் படிப்பது போன்றவற்றுக்கு பதில் சொல்லக் கூடியது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. எனவே மிகவும் கவனத்துடன் மாணவர்கள் தயாராக வேண்டியது அவசியம்.

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்து விடும். கடந்த கல்வியாண்டை பொறுத்தவரையில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருகை பதிவேடு அவசியம்

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு வருகை பதிவேடு என்பது முக்கியம். குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு வந்திருந்தால் தான் மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும். இல்லையெனில் மருத்துவ சான்று கேட்க வாய்ப்புண்டு. சில சமயங்களில் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். எனவே தான் வருகை பதிவேடு முக்கியம் என்று ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
  • மாணவர்களின் பெயர் பட்டியல்

    இந்த சூழலில் 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலை கொண்டு தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறை மேற்கொண்டு வருகிறது.
11ஆம் வகுப்பு எமிஸ் தகவல்

இந்நிலையில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு தற்போதைய பட்டியலை கவனமாக தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது பெரும் சர்ச்சையானது. இதற்கான காரணங்களை கண்டறியும் வேலையில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியது. பின்னர் மறுதேர்வு மூலம் எழுதுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. இதையடுத்து உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டன. நடப்பாண்டை பொறுத்தவரை பள்ளிக்கு தொடர்ச்சியாக வருகை புரியும் மாணவர்களுக்கே பொதுத்தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..