சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரேசன் கடைகள் இன்றும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் நவம்பர் 10ம் தேதியும் திறந்திருக்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. இது தவிர துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.
தீபாவளி பண்டிகை: அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்படும் பொருட்களுடன் துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது புதுவித அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. பண்டிகை மாதங்களில் ரேசன் பொருட்கள் வாங்குவது கணிசமாக அதிகரிக்கும். காரணம் வித வித பலகாரம் செய்வதற்காக மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவார்கள் என்பதினால் சர்க்கரை, பாமாயில், பச்சரிசி உள்ளிட்டவைகளின் தேவை அதிகமா இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ரேசன் பொருட்கள் கொள்முதலை அதிகரிக்க உணவுத்துறை வழங்கல் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. இது தவிர துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.
தீபாவளி பண்டிகை: அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்படும் பொருட்களுடன் துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது புதுவித அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. பண்டிகை மாதங்களில் ரேசன் பொருட்கள் வாங்குவது கணிசமாக அதிகரிக்கும். காரணம் வித வித பலகாரம் செய்வதற்காக மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவார்கள் என்பதினால் சர்க்கரை, பாமாயில், பச்சரிசி உள்ளிட்டவைகளின் தேவை அதிகமா இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ரேசன் பொருட்கள் கொள்முதலை அதிகரிக்க உணவுத்துறை வழங்கல் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.