ரோஹித் ஷர்மாவை கட்டாயப்படுத்திதான் கேப்டன் பொறுப்பை ஏற்க செய்தேன்.. கங்குலி தகவல்!

ரோஹித் ஷர்மாவை கட்டாயப்படுத்திதான் கேப்டன் பொறுப்பை ஏற்க செய்தேன்.. கங்குலி தகவல்!
By: TeamParivu Posted On: November 12, 2023 View: 88

கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன்
 பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான 
கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐக்கும் 
கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. 
மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு 
விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.கடைசியில்
 டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இருந்த கோலி 2022 ஆம் ஆண்டு
 தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகு அந்த பொறுப்பையும் துறுந்தர். 
அதன்பிறகுதான் இந்திய அணிக்கு அனைத்து வடிவிலும் கேப்டனாக 
நியமிக்கப்பட்டார் ரோஹித் ஷர்மா.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்போது கலந்துகொண்ட 
சவுரவ் கங்குலி “ரோஹித் ஷர்மா அப்போது இந்திய அணியின் கேப்டன்
 பொறுப்பை ஏற்க சம்மதிக்கவில்லை. நான்தான் அவரை வற்புறுத்தி 
ஏற்கவைத்தேன். அவர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் நானே அவர்
 பெயரை அறிவிப்பேன் என்று சொல்லுமளவுக்கு சென்றது. அவர் ஏன் அந்த
 பொறுப்பை ஏற்க மறுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் கோலிக்கு
 பிறகு அந்த பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்த அவர்தான் 
சரியான நபர் என்று நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..