குறிப்பாக, கலங்கரைவிளக்கத்தில் இருந்து மயிலாப்பூர் கச்சேரிசாலை, மந்தைவெளி வழியாக சுரங்கம்தோண்டும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, தரைக்கு அடியில் உள்ள கேபிள்கள், ஆழ்குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் அடித்தள தூண்கள், மயிலாப்பூர் - மந்தைவெளி இடையே கட்டப்படும் இரட்டை சுரங்கப்பாதைக்கு இடையூறாக இருக்கிறது. இதனால், பறக்கும் ரயில்நிலையத்துக்கு அருகே பக்கிங்ஹாம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள மதகு போன்ற கல்வெர்ட் பாலம் இடிக்கப்பட உள்ளது.
மயிலாப்பூர் லஸ் கார்னர்சாலை மூடப்பட உள்ளதால்மந்தைவெளியில் இருந்து லஸ் கார்னர் வரும் வாகன ஓட்டிகள், சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகன போக்குவரத்து திருப்பி விடப்படும் சூழலில், இடிக்கப்படும் கட்டமைப்புக்கு பதிலாக, மற்றொரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளனர். வேலை நடைபெறும் இடங்களில் சாலைகளை மூடுவதற்கும், வெவ்வேறு பாதையில் வாகனங்களை திருப்பி விடுவதற்கும் சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் தெரிவித்தனர்.