ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்..

ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்..
By: TeamParivu Posted On: November 25, 2023 View: 69

ஐபிஎல் விளையாடுவதை கைவிட்ட தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்வேஷ் ஷஷி, யோகியாக மாறி, தொழிலதிபராக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றியுள்ளார்.
இப்போது அவர் ரூ. 464 கோடி மதிப்பில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார், மேலும் ஆலியா பட் மற்றும் யாமி கெளதம் போன்ற திரை நட்சத்திரங்கள் அவரிடம் யோகா பயிற்சியை எடுக்கின்றனர்.
அவரது யோசனையை பாலிவுட் நட்சத்திரங்களான மலைக்கா அரோரா, ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மீரா கபூர் ஆகியோர் விரும்பினர், மேலும் அவர்கள் சர்வேஷ் ஷஷியின் ஸ்டார்ட்அப்பை ஆதரித்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் உலகளாவிய நட்சத்திரமான ஜெனிபர் லோபஸ் ஆகியோர் சஷியின் முயற்சியில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.  

ரூ.464 கோடி மதிப்புள்ள நிறுவனம்


கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ஷஷி, சர்வா மற்றும் திவா யோகா (Sarva and Diva Yoga) ஆகிய ஆரோக்கிய நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். Traxon தரவுகளின்படி, சர்வாவின் சமீபத்திய மதிப்பீடு $14.1 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.464 கோடி) ஆகும்.

யோகா எப்போது தொடங்கியது?

யோகாவில் ஷஷியின் ஆர்வம் தற்செயலாக நடந்தது. அவரது தந்தை ஒரு foundation class எடுக்க தொடங்கினார், ஆனால் அதைத் தொடர முடியாமல், மகனை யோகா பாடங்களை கற்பிக்க சொன்னார்.
சர்வேஷின் தந்தை சசி குமார் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் சபரி குழுமத்தின் தலைவர். அவரது யோகா பயிற்சி மக்களைச் சென்றடைந்ததும், அவரை யோகாவை ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இருவரும் தங்கள் பயணத்தை சென்னையில் உள்ள மூன்று ஸ்டுடியோக்களுடன் தொடங்கி, நவீன வாழ்க்கை முறையின் அழுத்தத்தை சமாளிக்க யோகா அடிப்படையிலான ஆரோக்கியத்தை வழங்குகிறார்கள்.
நிறுவனம் மெய்நிகர் பாடங்களுக்கான மொபைல் ஆப் கொண்டுள்ளது. அவர்கள் அதிலிருந்து மொத்தம் $12.1 மில்லியன் நிதி திரட்டியுள்ளனர்.

இரண்டு ஐபிஎல் அணிகளில் தேர்வு செய்யப்பட்டார்

அகிம்சை, போதையில்லாமை, பிரம்மச்சரியம், உண்மை ஆகிய ஐந்து சபதங்களைக் கடைப்பிடிக்கும் யோகி சர்வேஷ். தமிழ்நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடிய பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடும் தனது கனவை நிறைவேற்றும் முடிவில் இருந்தார். அதேபோல், அவர் 2 ஐபிஎல் அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், 5 லட்சம் கடனுடன் சர்வா நிறுவனத்தை தொடங்குவதுதான் சரி என்று நினைத்தார். 2013-ல் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நிறுவனம் 2016-ல் ரூ.100 கோடி மதிப்பை எட்டியது.
ஒரு அடையாளமே இல்லாமல் இருந்த சர்வேஷ் ஷஷி, தனது வெற்றிக்கப் பிறகு ‘TheRock’ என்று அறியப்படும் Dwayne Johnson மற்றும் Naomi Campbell போன்ற பிரபலங்களுடன் பழகும் அளவுக்கு வளர்ந்துள்ளார். அவர் ஜெனிஃபர் லோபஸின் இசை நிகழ்ச்சியைக் காண அவரது தனிப்பட்ட விமானத்தில் லாஸ் வேகாஸுக்குச் சென்றார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..