அடித்து நொறுக்கிய கனமழை : மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மளமளவென உயர்வு : எவ்ளோ தண்ணீர் வருது தெரியுமா?

அடித்து நொறுக்கிய கனமழை : மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மளமளவென உயர்வு : எவ்ளோ தண்ணீர் வருது தெரியுமா?
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 67

தமிழக நீர் பிடிப்பு பகுதி

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் சரியாக மழை பெய்யாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைய தொடங்கியதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்தது. அதனால் தமிழக நீர் பிடிப்புகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியது.

நீர்வரத்து குறைவு

இந்நிலையில் மேட்டூர் அணைக்குவினாடிக்கு 4,431 கன அடி அளவு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வினாடிக்க 4,௦72 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், அணையின் நீர் இருப்பு 28.58 டிஎம்சியாக உள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.4 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..