பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்-வைகோ சொன்ன அதிர்ச்சி தகவல்!

 பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்-வைகோ சொன்ன அதிர்ச்சி தகவல்!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 65

பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும், அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று வைகோ கூறி உள்ளார்.இலங்கையில் இலங்கை தமிழர்கள் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர் பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.


வைகோ மாலை அணிவித்து மரியாதை
இதேபோல் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இலங்கையில் இலங்கை தமிழர்கள் சுதந்திரத்திற்காக போராடிய எல்டிடிஇ இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்
பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் என்னத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழ நெடுமாறன்
பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுடன் பழ ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..