நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் ஒன்பது இடங்களுக்கு மேல் பாஜக வராது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பாஜகவிற்கு 7ல் இருந்து 9 இடங்களுக்கு மேல் வராது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தல்:
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, "தெலுங்கானா மாநிலத்தில் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும், 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று கூறிய அவர்,9 இடங்களுக்கு மேல் வராது:
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 இடங்களில் பாஜகவிற்கு 7-ல் இருந்து 9 இடங்களுக்கு மேல் வராது என்றார்.புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி:
பணம் எங்கிருந்து வருகிறது?
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் எந்த ஒரு தொழிலும் செய்யாத முதலமைச்சர் ரங்கசாமி 5 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டி வருகிறார் என்றும், அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது?.
மனைவி பெயரில் இடம்:
அதேபோல் பாஜகவை சேர்ந்த ஒரு அமைச்சர் காமராஜர் சாலையில் இந்தியன் வங்கி இயங்கி வந்த இடத்தை தனது மனைவி பெயரில் வாங்கியுள்ளதாகவும், இவருக்கும் பணம் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் எந்த ஒரு தொழிலும் செய்யாத முதலமைச்சர் ரங்கசாமி 5 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டி வருகிறார் என்றும், அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது?.
மனைவி பெயரில் இடம்:
அதேபோல் பாஜகவை சேர்ந்த ஒரு அமைச்சர் காமராஜர் சாலையில் இந்தியன் வங்கி இயங்கி வந்த இடத்தை தனது மனைவி பெயரில் வாங்கியுள்ளதாகவும், இவருக்கும் பணம் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்.
கொள்ளை அடிக்கும் ஆட்சி:
மேலும் புதுச்சேரியில் கொள்ளை அடிக்கும் ஆட்சி நடக்கிறது என்றும், ஆளுநரும் கூட்டு கொள்ளை அடிப்பதால் தான் நாங்கள் குடியரசு தலைவரை பார்க்க போகிறோம் என்றார். இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நடக்கும் ஊழலை வேடிக்கை பார்ப்பதால் பிரதமருக்கும் தொடர்புள்ளது என்றும், இதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பதில் கொடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் கொள்ளை அடிக்கும் ஆட்சி நடக்கிறது என்றும், ஆளுநரும் கூட்டு கொள்ளை அடிப்பதால் தான் நாங்கள் குடியரசு தலைவரை பார்க்க போகிறோம் என்றார். இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நடக்கும் ஊழலை வேடிக்கை பார்ப்பதால் பிரதமருக்கும் தொடர்புள்ளது என்றும், இதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பதில் கொடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.