அமலுக்கு வந்தது 4 நாட்கள் போர் நிறுத்தம்.. காசாவுக்குள் செல்லும் 300 ட்ரக்குகள்.. பிணைக் கைதிகளை விடுவிக்க தொடங்கிய ஹமாஸ்!

அமலுக்கு வந்தது 4 நாட்கள் போர் நிறுத்தம்.. காசாவுக்குள் செல்லும் 300 ட்ரக்குகள்.. பிணைக் கைதிகளை விடுவிக்க தொடங்கிய ஹமாஸ்!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 36

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாட்கள் போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து முதற்கட்டமாக 13 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது. ஹமாஸ் ஆயுதக் குழுவினர், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடங்கினர். ஹமாஸ் குழுவினர் நடத்திய வான்வழி மற்றும் தரை வழித்தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து ஹமாஸ் மீது போர் தொடங்கியது இஸ்ரேல். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி இன்றுடன் 49 நாட்கள் ஆகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 15 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. இதனை தொடர்ந்து நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தது இஸ்ரேல்.

மேலும் இந்த நாட்களில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்தது. ஒவ்வொரு முறை 10 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போரை நிறுத்தவும் இஸ்ரேல் சம்மதித்தது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து பேசியுள்ள கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொண்ட முதல் குழு இன்று விடுவிக்கப்படும் என கூறியுள்ளார். கத்தார் மற்றும் அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுவிக்கும். இஸ்ரேல் அந்நாட்டு சிறையில்150 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும். மேலம் போர் நிறுத்த காலத்தில் காசா குடிமக்களுக்கு இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை அனுப்பும்.ஏறக்குறைய 50 நாட்களாக நடந்து வந்த போரில் முதன்முறையாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை ஐ.நா உதவி நிறுவனங்களுக்காக காசா பகுதிக்குள் நான்கு எரிபொருள் டேங்கர்கள் மற்றும் நான்கு சமையல் எரிவாயு டேங்கர்கள் ரஃபா எல்லை வழியாக சென்றுள்ளன. மேலும் காசா மக்களுக்கு உதவும் வகையில் அத்தியவசிய பொருட்களுடன் காத்திருக்கும் 300 ட்ரக்குகளும் அடுத்தடுத்து காசாவுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான நிலையில் இதுதொடர்பான விசாரணைக்காக அந்த மருத்துவமனையின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் குழுவினர் தங்களின் சுரங்கப்பாதையை வைத்துள்ளதாக தெரிவித்த இஸ்ரேல் கடந்த வாரம் அதற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..