சென்னை: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் அறிமுகமான திறமையாளர்கள், தமிழ்த் திரையுலகில் பாடகர்களாக வலம் வருகின்றனர். இந்நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன.
சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த முறை நடந்தசீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்பே திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தில் ஸ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து பாடலைப் பாடியுள்ளனர். நடுவராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர்கள் தமன், இமான் மூலமும் பல குழந்தைகளுக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிஇன்று மாலை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. ஸ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா,மேக்னா ஆகியோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 3 மணி முதல், நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.