கியான்வாபி மசூதியில் கள ஆய்வு: வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது ஏஎஸ்ஐ

கியான்வாபி மசூதியில் கள ஆய்வு: வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது ஏஎஸ்ஐ
By: TeamParivu Posted On: December 19, 2023 View: 48

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. கோயிலின் ஒரு பகுதியைஇடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் கள ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆய்வு நடத்தஅனுமதி வழங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆய்வு நடத்த தடை விதிக்கமுடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தெரிவித்தது. அதே நேரம், மசூதியை ஆக்கிரமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட்மாதம் ஆய்வை தொடங்கியது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..