கோவை வேளாண் பல்கலை. மாணவர்கள் நடத்தும் இலவச பாட சாலை - 69 ஆண்டுகளாக தொடரும் சேவை

கோவை வேளாண் பல்கலை. மாணவர்கள் நடத்தும் இலவச பாட சாலை - 69 ஆண்டுகளாக தொடரும் சேவை
By: TeamParivu Posted On: December 24, 2023 View: 55

கோவை: சத்திரம், கோயில் முதலியவை கட்டுதலைவிட ஏழைக்குக் கல்வி புகட்டுதல் மேலானது என்றார் கல்வியின் சிறப்பை உணர்ந்த மகாகவி பாரதியார். எனவேதான், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் என்று பாடினார். அப்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடந்த 69 ஆண்டுகளாக, தொய்வின்றி தொடர்ந்து மாலை நேர பாடசாலை மூலம் கல்வியை வழங்கி வருகிறது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம். பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பண்ணைத் தொழிலாளர்களுக்கு கையெழுத்திட கற்றுக் கொடுக்க,பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த 1954-ம்ஆண்டு ஒரு சிறிய முயற்சியாக தொடங்கப்பட்ட இந்தமன்றத்துக்கு, 1970களில், தொழிலாளர்கள் அவர்களது குழந்தைகளையும் படிக்க அழைத்து வந்துள்ளனர்.நாளடைவில் பண்ணைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தபோதும், இந்த சேவையை நிறுத்தாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்கள் பயிலும் பாடசாலையாக மாற்றியுள்ளனர். தற்போது சிறிய பள்ளிக்கூடம் போல இயங்கிவரும் இந்த பாடசாலையில் பல்கலைக்கழக மாணவர்களே ஆசிரியர்கள். தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கு பயிற்றுவித்தவர்கள் மட்டுமன்றி, இங்கு பயின்ற மாணவர்கள் பலரும்தற்போது மத்திய, மாநில அரசு பணிகளில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். படிக்கும்போதே மாணவர்கள் மத்தியில் சேவை மனப்பான்மைக்கு வித்திட்டுவரும் இந்த சமுதாய நற்பணி மன்றம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி கூறியதாவது:

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..