பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல், மானாவரி பயிர்களுக்கு நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல், மானாவரி பயிர்களுக்கு நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை
By: TeamParivu Posted On: December 24, 2023 View: 74

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல், மானாவரிப் பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, விளைநிலங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயாபுரம், விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பாசிப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, செடியிலேயே முளைத்து போய்விட்டன. மக்காச்சோளம், கம்பு,பருத்தி, மிளகாய், சின்ன வெங்காயப் பயிர்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி பாசனப் பகுதியில், நெற்பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் விளைநிலங்களில் பல இடங்களில் 3 முதல் 4 அடி உயரத்துக்கு மண் திட்டுகள் ஏற்பட்டுள்ளன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..