141 அடியை எட்டியதால் முல்லை பெரியாறு அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

141 அடியை எட்டியதால் முல்லை பெரியாறு அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
By: TeamParivu Posted On: December 24, 2023 View: 71

கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 141 அடியை எட்டியதைத் தொடர்ந்து, இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் உயரம் 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியே உச்ச அளவாகக் கொண்டு நீர்த் தேக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் போதிய மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் 135 அடியாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழையினால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் அணைக்கு நீர்வரத்து சீராக இருந்தது. அதே நேரம் குறைந்தபட்ச அளவே நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், நேற்று இரவு 7 மணிக்கு 141 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து, இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,714 கன அடியும், வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது. 142 அடிக்கு நீர்மட்டம் உயர ஒரு அடியே உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..