கொட்டித் தீர்த்த அதிகனமழை.. அரசியலான அறிவியல்: வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்?

கொட்டித் தீர்த்த அதிகனமழை.. அரசியலான அறிவியல்: வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்?
By: TeamParivu Posted On: December 26, 2023 View: 40

சென்னை: தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநகரிலும், 3-வது வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை படைத்த இரு பேரிடர்களும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களின் வடுக்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்களில் இருந்து மறையாது.
இவ்விரு பேரிடர்களின்போதும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்தி இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. ஆனால், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் வானிலை முன்னறிவிப்பு சரியாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். காயல்பட்டினத்தில் 95 செமீ அளவுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கவில்லை என்பது தமிழக அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு.
சென்னை வானிலை ஆய்வு மையமோ, "2 பேரிடர்களின்போதும் முறையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 21 செமீ-க்கு மேல் (அதிகனமழை) என்றால் அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் பெய்யலாம். அதை கணிக்க முடியாது’’ என விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘சென்னை வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது. 3 ரேடார் டாப்லர் கருவிகளுடன் இயங்கி வருகிறது. இதைக்கொண்டு ஒவ்வொரு நாளும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கி வருகிறது. தென் மாவட்ட அதிகனமழை தொடர்பாக 12-ம் தேதியே முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள 3 ரேடார்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ரேடார்கள் சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள மழை மேகங்கள் குறித்த விவரங்கள் மற்றும் காற்றின் வேகம்,வீசும் திசையை துல்லியமாக வழங்க முடியும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க துல்லியம் குறையும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..