தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக டிவிட்டரில் தகவல்...!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக டிவிட்டரில் தகவல்...!
By: TeamParivu Posted On: July 12, 2022 View: 84

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக டிவிட்டரில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்க கூடிய செய்தியில்:

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். என அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் கூட 2, 3 நாட்கள் காய்ச்சல் காரணமாக அவர் வீட்டில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடந்து அவர் வீடு திரும்பியதை அடுத்தது அவருக்கு சற்று உடற்சோர்வு ஏற்பட்டிருந்ததாகவும், இதனை அடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாகாக இருக்க வேண்டும் எனவும் தமிழக மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:
#கொரோனா  # முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..