தனது நான்கு குழந்தைகளை முறையாகப் பராமரிக்காமல் கொன்றுவிட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை யில் இருந்த கேத்லீன் ஃபோல்பிக் விடுதலை செய்யப்பட்டதுதான் 2023ஆம் ஆண்டின் பரபரப் பான அறிவியல் தொழில்நுட்பச் செய்தி. கடந்த 20 ஆண்டுகளில் மரபணு ஆய்வுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ஃபோல்பிக்கின் குழந்தைகளான சாரா, லாரா இருவருக்கும் மரபணுத் தொகுதியில் CALM2 - G114R எனப்படும் மிகவும் அரிதான மரபணுப் பிறழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிறழ்வு உள்ளவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாரடைப்பு ஏற்படும். சாரா, லாரா தவிர ஏனைய இரண்டு குழந்தைகள் காலேப், பேட்ரிக் ஆகியோரும் REM2 எனும் அரிய மரபணுப் பிறழ்வை அவர்களது தந்தையிடமிருந்து பெற்றனர் எனவும் ஆய்வுகள் நிறுவின.
இந்த இரண்டு மரபணுப் பிறழ்வுகள் சேர்ந்ததால்தான் மரணம் சம்பவித்தது என நிரூபிக்கப்பட்டது. மேலும், கட்டுப்பாடற்ற வலிப்பு நோய் காரணமாகத் தான் பேட்ரிக்கின் மரணம் சம்பவித்தது எனவும் நிறுவப்பட்டது. நான்கில் மூவரின் மரணம் இயற்கை மரணம்தான் என அறிவியல் தொழில்நுட்பம் வழியேநிறுவியதன் தொடர்ச்சியாக ஃபோல்பிக்கின் மேல்முறையீட்டை ஏற்று ஆஸ்திரேலியா அரசு அவரை விடுதலை செய்தது.