கு.க.செல்வம் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!

கு.க.செல்வம் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!
By: TeamParivu Posted On: January 03, 2024 View: 56

மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கு.க.செல்வம் திமுகவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், அவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் கூறியிருந்தார். அதோடு, முதல் ஆளாக கு.க.செல்வம் வீட்டிற்கு மனைவியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, மறைந்த கு.க.செல்வம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்தும் பொழுது, முதல்வருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. த. வேலு, ஜெ. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..