படகு மோதி ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு: கடற்கரையில் புதைப்பு

படகு மோதி ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு: கடற்கரையில் புதைப்பு
By: TeamParivu Posted On: January 05, 2024 View: 42

புதுச்சேரி: முட்டையிட கரைக்கு வந்த ஆலிவ் ரெட்லி ஆமை படகு மோதி இறந்து கரை ஒதுங்கியது‌.
புதுச்சேரி முதல் மரக்காணம் வரை ஜனவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரெட்லி எனப்படும் அரியவகை ஆமை முட்டையிட கரைக்கு வரும் போது படகு மோதி இறந்து புதுச்சேரி தலைமை செயலகம் அருகே இன்று கரை ஒதுங்கியது. 30 வயதுமிக்க 25 கிலோ எடையிலான ஆமை உடலை வனத்துறையினர் கடற்கரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..