சென்னை: காசிமேடு மீனவர் வலையில் 300 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. இதை கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். சென்னை காசிமேடு பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 200 படகுகள் நேற்று அதிகாலை கரை திரும்பின. வவ்வால், வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.