விழுப்புரம்: வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’விடுத்திருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றுமுற்பகல் வரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. விழுப்புரம், கோலியனூர், வளவ னூர், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ( மில்லி மீட்டர் அளவில் ) விழுப்புரம் - 86, வானூர்- 120, திண்டிவனம் -74.5, செஞ்சி -19 மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 133 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக விழுப்புரம் மாவட்டத்தில் 67.09 மி.மீ பதிவாகியுள்ளது. செஞ்சியில் விடிய விடிய பெய்த மழையால் காந்தி பஜார் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் துப்புரவுப் பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றினர்.
கனமழையால், விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கழிவு நீருடன் கலந்த மழைநீர் தேங்கி நின்று அப்பகுதி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் கீழ்பெரும்பாக்கம், கா.குப்பம், எருமனந்தாங்கால், பொய்யப்பாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 4 கி.மீ சுற்றி விழுப்புரம் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிய பின், பிற்பகல் முதல் போக்குவரத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
விழுப்புரத்தில் உள்ள தாழ்வானபகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள் ளன. குறிப்பாக விழுப்புரம் நகராட் சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியா மல் கடும் அவதிக்குள்ளாயினர். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந் துள்ள மழைநீரை வெளியேற்ற விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருவதாக தாமரைக்குளம் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.