சென்னை: சென்னை தீவுத்திடலில் ‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தமிழக சுற்றுலாத் துறைசார்பில் நடைபெறும் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, ‘‘பயன்மிக்க இந்த சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை பொதுமக்கள் அதிக அளவில் பார்வையிட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது, ‘‘இந்தப் பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறும். சுற்றுலாத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., சுற்றுலாத் துறைச் செயலர் க.மணிவாசன், இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.