கொல்கத்தா: “டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இடம்பெற வேண்டும். ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அஸ்வின் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை” என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவரை டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவராக நான் நினைக்கவில்லை. பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதேசமயம் பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அவரால் அணிக்கு என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் இடம்பெற வேண்டும். ஆனால், வொயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவர் தகுதியானவர் என நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.