புதுடெல்லி: குளிர்காலத்தில் வடமாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இந்தக் குழப்பமான சூழ்நிலையை கையாள்வதற்கு புதிய விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ளது.
பயணம் மறுக்கப்படுதல், விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் போன்ற காரணங்களால் விமான நிறுவனங்களால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கூறும் DGCA நிலையான இயக்க விதிகள் (SOP) குறிப்பிட்ட காரணங்களுக்களுக்காகவோ அல்லது மூன்று மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் SOP-யை உடனடியாக கடைபிடிக்க வேண்டும். என்றாலும் விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் மீறிய அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த விதிகள் பொருந்தாது என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.