சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் 32 பேர் தாயகம் திரும்பினர்

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் 32 பேர் தாயகம் திரும்பினர்
By: TeamParivu Posted On: January 21, 2024 View: 51

ராமேசுவரம்: நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 32 மீனவர்களும் இலங்கை ஊர்காவல்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து 32 மீனவர்களும் புறப்பட்டு, சென்னைவிமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், மீனவர்களை தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..