கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாக கருவில் உள்ள குழந்தையின் குறைபாடுகளை கண்டறிவதற்கான அதிநவீன கருவி சுமார் 1 கோடி ரூபாய் செலவில் சென்னை அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 5 மாதத்திற்கு பிறகே கருவின் குறைபாடுகள் கண்டறியப்படும் நிலையில் இந்த கருவி மூலமாக 9 வாரங்களில் குறைபாடுகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். AutoDELFIA எனப்படும் இந்த கருவி வழக்கமாக தனியார் கார்ப்ரேட் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கருவி தற்போது சென்னை ஓமந்தூதாரர் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் autodelfia maternal analyzer என்ற கருவி நிறுவப்படுகிவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இக்கருவி மூலம் கர்ப்பிணிகளுக்கு 9வது வாரத்தில் ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் கருவின் உள்ள குழந்தையின் நிலையை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். வழக்கமாக 5வது மாதத்திற்கு பிறகு ஸ்கேன் மூலம் கண்டறியப்படும் கருவின் குறைபாடுகளை 9 வது வாரத்திலேயே ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய AutoDELFIA கருவி உதவுவதாகவும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருவில் உள்ள குழந்தையின் நிலையை கண்டறியும் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் 5,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெறும் 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
autodelfia maternal analyzer கருவியால் ஒரே நேரத்தில் 100 ரத்த மாதிரிகளை சோதனை செய்து 2மணி நேரத்தில் முடிவையும் அறியும் வசதியும் உள்ளது. ரத்த பரிசோதனை மூலம் கருவின் நிலையை அறிதல் பற்றிய போதிய விழிப்புணர்வு கற்பிணிகளுடம் இதுவரை இல்லை என்று அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர். உரிய விழிப்புணர்வு ஏற்பட்டால் சத்துக்குறைவு உள்ளிட்ட குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க முடியும் என்று கூறும் மருத்துவர்கள் அதற்கு அரசு மண்ணோடு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன கருவியின் சேவையை கர்ப்பிணிகள் பயன்படுத்திக்கொள்ளும் படி அறிவுறுத்துகின்றனர்.
Tags:
#சென்னை
# அரசு பன்னோக்கு மருத்துவமனை
# autodelfia maternal analyzer
# அதிநவீன கருவி