அனிமல் போன்ற ஒரு படத்தில் நான் நடிக்கவே மாட்டேன்… டாப்ஸி கருத்து!

அனிமல் போன்ற ஒரு படத்தில் நான் நடிக்கவே மாட்டேன்… டாப்ஸி கருத்து!
By: TeamParivu Posted On: January 23, 2024 View: 40

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து தைரியமான தன் மனதில் படும் கருத்துகளைக் கூறிவரும் டாப்ஸி, சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியையும் சர்ச்சைகளையும் சந்தித்த அனிமல் திரைப்படம் குறித்து தன்னுடைய கருத்துகளை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் “நான் அனிமல் போன்ற ஒரு படத்தில் நடிக்கவே மாட்டேன். நான் இன்னும் அந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பலர் அந்த படம் பற்றி கூறுகிறார்கள். ஹாலிவுட் படங்களை ஒப்பிட்டு அவை பிடிக்கும்போது ஏன் ‘அனிமல்’ பிடிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். அங்கு படம் பார்த்துவிட்டு யாரும் பெண்களை பின்தொடர்வதில்லை. நம் நாட்டில் நடக்கிறது. அதனால் அவர்களோடு நம் படங்களை ஒப்பிட முடியாது. அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..