இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47), கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதையொட்டி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த பவதாரிணி, மைடியர் குட்டிச்சாத்தன்(1984) என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானவர். தமிழில் பிரபுதேவா நடித்த ராசய்யா(1995) படத்தில் ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடலுடன் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடிமக்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் 2000-ம் ஆண்டு வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விரு தையும் பெற்றார்.
உடல்நலக்குறைவால் இறந்தபாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.