வாசகியரின் உற்சாகத்தால் வண்ணமயமான ஈரோடு

வாசகியரின் உற்சாகத்தால் வண்ணமயமான ஈரோடு
By: TeamParivu Posted On: January 28, 2024 View: 32

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ’பெண் இன்று’ சார்பில் ஈரோட்டில் ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க, காலை முதலே வாசகியர் வரத் தொடங்கினர். சிந்தனைக்கு விருந்தளிக்கும் பேச்சரங்கமும் மனதுக்கு மகிழ்வளிக்கும் விளையாட்டுப் போட்டிகளுமாக நாள் முழுவதையும் வாசகியர் உற்சாகத்துடன் கழித்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொள்வது என ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி ரமேஷ் பேசினார். “கூட்டுக் குடும்பமாக இருந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை ஆண்கள் செய்யத் தயங்கினர். ஆனால், இந்தத் தலைமுறையில் அதுபோன்ற சிக்கல்கள் குறைவு. ஆண்களும் சமையல் செய்கின்றனர். இது வரவேற்கக்கூடியது.ஒருபுறம் இப்படி இருக்க, இன்னொருபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தால் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். 18 வயதுக்குக் குறைவான பெண்கள் விருப்பப்பட்டு, காதலித்துத் திருமணம் புரிந்தாலும் சம்பந்தப்பட்ட ஆண் மீது ’போக்சோ’ வழக்கு பதிவு செய்யப்படும். குடும்பங்கள் இதை உணர வேண்டும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..