தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் அஷ்மிதா சாலிஹா

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் அஷ்மிதா சாலிஹா
By: TeamParivu Posted On: February 03, 2024 View: 24

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 61-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, 44-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் எஸ்டர் நுருமி வார்டோயோவுடன் மோதினார். 57 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா 21-14, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநநாத் 19-21,15-21 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவிடம் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்திரி கோபிசந்த் ஜோடி 12-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் திவிபூஜி கசுமா, அமலியா சகயா பிரதிவி ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..