விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!
By: TeamParivu Posted On: July 28, 2022 View: 78

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (27.7.2022) பிற்பகல் சுமால் 3.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இதே விபத்தில் கடும்காயமடைந்த விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானீஸ்வரனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சமும் மற்றும் கடும் காயமடைந்த பவானீஸ்வரனுக்கு ரூபாய் ஒரு இலட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:
#விருதுநகர்  # வெடி விபத்து  # நிதியுதவி  # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..